16/05/2017

தமிழ்-2




உடைபோல் அணிவோம் பிறர்மொழியை
உயிராய் மதிப்போம் தாய்மொழியை
உடையை வேறாய் அணிந்திடலாம்
உயிரை இழந்தால் யாதென்போம்?

ஆங்கிலம் அறிவது தனி-கலையே!
தமிழை விடுவதோ தற்கொலையே!
நாக்கின் நுனியில் இருந்துவிட்டால்
நாகரீகம் என ஆகிடுமோ?!

டாடி என்றால் அவமானம்!
அப்பா என்பதே அடையாளம்!
அடிமைத் தளையை அறுத்தெறிய
ஆங்கில மோகம் வெறுத்திடுவோம்!

பிழைக்கும் வழியாய் இருப்பதாலே!
பிள்ளைக்கு பலமொழி கற்பிப்போம்!
அறிவைப் பெருக்கிட மொழியறிவோம்!
அனைவரும் மகிழ்வுற வாழ்ந்திடுவோம்!

கற்க கசடற கற்றிடுவோம்!
கல்வியில் சிறந்தே விளங்கிடுவோம்!
தமிழை மூச்சாய் சுவாசித்தே
தலைமுறை தாண்டி நிலைத்திடுவோம்!

தமிழின் சிறப்பை அறிந்திடுவோம்!
தமிழைத் தாயாய் போற்றிடுவோம்!
தமிழ்மறை குறளைப் படித்திடுவோம்!
தமிழனாய் குரலை உயர்த்திடுவோம்!

வாழ்க தமிழ்!

No comments: