21/05/2017

ஏதுமில்லை-சொல்லிடாதீர்



பாரினிலே பல உயிர்கள்
பட்டினியால் அலறுது!
பாலூட்ட தாயில்லாமல்
பசியினால் துடிக்குது!
பருக்கை அரிசி கிடைக்காமல்
பச்சைமண்ணு புறளுது!

உடைமை என்று எதுவுமில்லை!
உடுக்க ஒரு துணியுமில்லை!
படுக்கை விரிப்பு எதுவும் இல்லை!
படுக்க ஒரு இடமும் இல்லை!
பத்தினி பெத்தபிள்ளை
படும்பாடு கொஞ்சமில்லை!

எள்ளவும் புரியவில்லை
என்னிறைவன் கர்மமது?!
இக்கொடுமை கண்டபின்னும்
இடர்பாட்டு பாடுவோரே..
ஏதுமில்லை என்ற சொல்லை
இனியென்றும் சொல்ல வேண்டாம்!

-----------------------------------------------------------------
" உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.........."
----------------------------------------------------------------

No comments: