23/05/2017

ஊழியரின் மன ஒட்டம்



அடிமைப்படுத்திடும் எண்ணம் கொண்டு
அடக்கிட யாரையும் எண்ணாதே!
சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்
சீற்றம் என்றும் குறையாதே!


காலமும் நேரமும் வந்துவிட்டால்
காற்றாய் உடன்வெளி வந்திடுமே!

பணித்திடும் எல்லாம் செய்துவிட்டால்
பொதிச்சுமை கழுதையாய் நினையாதே!

பொருளைப் பெரிதாய் நினையாதோர்
பாரினுள் உள்ளதை மறவாதே!
கடமையைக் கடவுளாய் காண்பவனை
கயிற்றால் கட்டுதல் அவமானம்!

கயிற்றை சினத்துடன் அறுத்தெறிந்தால்
கடவுளே தருவான் வெகுமானம்!
அன்பாய் அணைத்தால் அடங்கிடுவான்!
அடக்கிடத் துடித்தால் உடைத்திடுவான்!

பண்பாய் கதைத்தால் மதித்திடுவான்!
பதராய் மதித்தால் விலகிடுவான்!
கழிக்கும் கணங்கள் முழுவதுமே
கருத்தில் கண்ணாய் இருந்திடுவான்!

புத்தியின் சக்தியை கூட்டிடவே
புதுப்புது விசயங்கள் கற்றிடுவான்!
புயலாய் அனலாய் வேகத்துடன்
புத்துயிர் பெற்றதும் பாய்ந்திடுவான்!

No comments: