16/05/2017

இன்ப(ம்) மழையாகும் கவிதை




கல்லின் சிலைபோல
சொல்லில் உருசெய்ய
அகத்தின் அன்பெல்லாம்
எழுத்தில் பதிவாக
இறையின் வடிவாகும்
கவிதை!

காலம் மறைந்துவிட
தூரம் தொலைந்துவிட
உயிரும் உருகிவிட
உறைந்தே நின்றுவிட
உண்மைக் காதலாகும்
கவிதை!

வலியே வரியானால்
ருத்தம் எழுத்தானால்
ருத்தும் ரணங்கூட
விரைவில் பறந்தோட
விரும்பும் மருந்தாகும்
கவிதை!

மனதின் பதிவாலே
அழுத்த விளைவாலே
உணர்ச்சிக் குழம்பாலே
உதிக்கும் ஊற்றாகி
வழியும் மொழியருவி
கவிதை!

மொழியின் வழியாலே
எழுத்தின் சீராலே
அணியின் அழகாலே
நளின நதியாகி
கருத்தால் கடலாகும்
கவிதை!

வார்த்தைப் பொருளாலே
வாசிக்கும் திறத்தாலே
உள்ளம் இளகிவிட
இதயம் குளிர்ந்துவிட
இன்ப(ம்) மழையாகும்
கவிதை!

No comments: