15/05/2017

மனதில் வெறுமை ஏனோ?

மனதில் வெறுமை ஏனோ?
மதியில் தனிமை ஏனோ?
அமைதியை இழந்தேன் ஏனோ?
அவனை மறந்தததால் தானோ?!

அனைத்தும் அறிந்த அவனா-என்னை
அமைதியை அறிந்திட பணித்தான்
புயலாய் வீசிய என்னை
புழுவாய் பணித்தது ஏனோ?!

புதிராய் என்னுள் கேள்விகள்
புதிதாய் முளைக்குது இங்கே
புரிந்தால் என்னுள் மகிழ்வேன்
புதினம் புதிதெனக் கொள்வேன்

No comments: