15/05/2017

கண்ணன் பாடல்




கண்ணனின் வாயினில் அண்ட சராசரம்
கண்டதும் தாயினுள் வந்த பரவசம்

என்னென சொல்வேனோ?!- அதை
எப்படிச் சொல்வேனோ?!

கோவிந்தன் குழலொலி ராகத்தைக் கேட்டதும்
கோபியர் நெஞ்சினுல் பூத்திடும் காதலை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

கிருஷ்ணனின் சங்கொலி காதினில் வீழ்ந்ததும்
கிராதகன் துரியனின் சேனைகள் அதிர்ந்ததை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

மாதவன் வாய்மொழி கீதையை கேட்டதும்
ஆதவன் போல்ஒளி மின்னிடும் ஞானத்தை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

கேசவன் கையினில் சுழன்றிடும் சக்கரம்
கேடையம் ஆகியே காத்திடும் தர்மத்தை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

ஒவியம்: நதியா நாகராஜ்

No comments: