27/05/2017

நீ என் அதிர்ஷ்டமடி



புவியீர்ப்பு சக்திபோலே
தனியீர்ப்பு கொண்டவளே-உன்
விழியீர்ப்பு பார்வையாலே-எனை
முழுயீர்ப்பு செய்தாயடி!

உரிமையுள்ள உடைமையாக
உணர்வினிலே ஒன்றாக
உன்னுயுரே என்னுள்ளே
உதிரமாக ஓடுதடி!

காதல்மொழி வார்த்தை-எந்தன்
காதின்வழி வருமுன்னே
காதலி உன் எண்ண அலை
காட்சிபோலத் தெரியுமடி!

கலைகள்பல அறிந்தபின்னும்
கர்வம்சிரம் ஏறிடாத
கருணைக்கடல் மனதுக்கு
கடவுளாளே அமைந்ததடி!

சினம்கொண்ட உன்முகத்தை
சிந்தனையால் மனதினிலே
சிலைபோல வடித்துவிட்டால்
சிரம்கவிழ்ப்பாய் சிரித்தபடி!

ஈன்றவளின் தொடராக
இணைந்துவரும் நிழலாக
ஈரமுள்ள இதயமாக- நீ
இருப்பது என் அதிர்ஷ்டமடி!

No comments: