17/05/2017

விடியுமா? / தமிழனோட விடிவுகாலம்?!!!!



தமிழகமே! தமிழகமே!-ஏன்
தலைகுனிந்தாய் தமிழகமே!
வாழ்ந்த இனம் வீழ்வதாலே
வருந்தி நீயும் வாடினாயோ?!


ராஜராஐன் ஆண்ட இடம்-இன்று
ராட்சகர்கள் கையில் போச்சு!
காமராஜர் வாழ்ந்த இடம்- வெறும்
கானல் நீரின் வெள்ளமாச்சு!

அண்ணா நாமம் கொண்ட கட்சி!
அண்ணாவுக்கு நாமம் போட்ட கட்சி!
இரண்டு கட்சியும் ஆண்டாதால
இருப்பு எல்லாம் களவு போச்சு!

திராவிடன்னு சொல்லி சொல்லி
தமிழன் வாழ்வு கேள்வி ஆச்சு!
சாராயக்கடை திறந்து திறந்து
சாதி மத சண்டை ஆச்சு!

ராம ராஜ்யம் என்று சொல்லி
ரவுடி ராஜ்யம் நடத்தும் கட்சி
தமிழ்நாட்டின் வளத்தை எல்லாம்
தரிசா மாத்தத் துடிக்குதிங்கே!

தடுக்கக்கூட முடியாமல்
தலையிலடிச்சு போராடுறோம்!
தரித்திரக் காரனெல்லாம்
தனிக்கட்சி தொடங்குதிங்கே!

ஒன்னும் இங்கே புரியவில்லை!
ஒருத்தன்கூட ஒழுங்கு இல்லை!
தமிழனோட விடிவுகாலம்
தலைவிதியின் கையில்தானோ?!!!

No comments: