12/12/2017

நேர்மையின் வழி/வலி



நேர்மையைப் போதிக்கும் ஆன்றோரே....
நேர்மையின் பெருமையைக் கூறுகையில்
நேர்ந்திடும் விளைவையும் கூறிடுங்கள்!

நேரம் காலம் பார்க்காமல்
நேர்மையாய் உழைக்கின்ற பலருக்கும்
நேர்கின்ற அவலங்கள் கூறிடுங்கள்!

நேராய் இருக்கின்ற மரங்களுக்கும்
நேர்மையாய் நடக்கின்ற மனிதருக்கும்
நேர்வதை நேர்மையாய்க் கூறிடுங்கள்!

நேர்மையைப் பேசுதல் சுலபமென்றும்
நேர்மையைப் பேணுதல் கடினமென்றும்
நேர்மையின் வழி/வலி கூறிடுங்கள்!

—-செ. இராசா——

No comments: