12/12/2017

ஆசை கொள்(ல்)வோம்



உள்ளத்தில் தோன்றிடும் எண்ணமெல்லாம்
உள்ளே உறங்கிடும் விதைகளாகும்!
ஆசையாய் மாறிடும் எண்ணமெல்லாம்
ஆயிரம் கிளைகொண்ட விருட்சமாகும்!

துன்பத்தின் மூலத்தை ஆராய்ந்து
துளிர்விடும் ஆசையை வெட்டிடுவோம்!
இன்பத்தில் நாளும் நிலைப்பதற்கு
இதயத்தில் ஆசையை வேரறுப்போம்!

அளவுக்கு மீறிய ஆசைகளால்
அல்லள்கள் வருவதை உணர்ந்திடுவோம்!
அளவுடன் ஆசையைச் சீரமைத்து
அகிலத்தில் சிறப்புற உயர்ந்திடுவோம்!

அகத்தில் ஞானம் அடைவதற்கு- இனி
அரச மரத்தடி அமரவேண்டாம்!
அகத்தில் அமைதி நிலைப்பதற்கு- தீ
ஆசையைத் துரத்திட ஆசைகொள்வோம்!

----செ. இராசா-----

No comments: