25/12/2017

மனசாட்சியோடு நான்


நீ எதற்காக எழுதுகிறாய்?
.........
நான் எனக்காக எழுதுகிறேன்
.........
எனில்..... நீ சுய நலவாதியா?
........
இல்லை.. இல்லை..
நான் பிறருக்காகவும் எழுதுகிறேன்
......
எனில்...நீ புதியதை விதைக்கிறாயா?
.......
இல்லை... இல்லை
நான் புரிந்ததை எழுதுகிறேன்
..........
நீ யார் இதையெல்லாம் எழுத?
நீ என்ன எல்லாம் அறிந்தவனா?
......
அப்படி நினைக்கவில்லை......:
நான் அறிந்ததை எழுதுகிறேன்
........
அதைத்தான் அனைவரும் செய்கின்றனரே?
நீ ஏன் எழுதுகிறாய்?!
........
.......
ஆமாம்...நான் ஏன் எழுதுகிறேன்?!
.....

——-செ. இராசா——-

No comments: