14/12/2017

யார் இவர்?



பச்சைவர்ண உடுப்பணிந்து
புரட்சிவெறி கண்களோடு
பார்க்கும் மனிதர் யாரிவர்?

உள்ளூர் வெளியூர் பதாகைகளில்
உடுத்தும் இளைஞர் ஆடைகளில்
உறையும் மனிதர் யாரிவர்?

யாரிவர் என்றா கேட்கின்றீர்?
"சே. குவேரா" என்பது விடையாகும்!
"சே" புரட்சியின் விதையாகும்!

"சே" என்றால் எதிரியெல்லாம்
"தீ" என்றே பயத்துடனே
"ஓ" என்றே அலறினராம்!

"சே" என்றால் நண்பரெல்லாம்
"ஆ" என்றே வாய்திறந்து
"வா" என்றே அழைத்தனராம்!

ஆம்.
ஆதிக்க சக்திகளின்
பொதுவான எதிரியவர்: "சே"

அடக்குமுறை புரட்சியெனில்
பொதுவான தோழரவர்: "சே"

-----செ. இராசா-----

No comments: