25/12/2017

74வது கவிச்சரம்--இயேசு பாலன் பிறப்பு



தமிழ்த்தாய் வணக்கம்:
********************************
எத்தனை கோடித் தமிழர்களை
எழிலுடன் தமிழ்த்தாய் பெற்றெடுத்தாள்!
அத்தனைத் தமிழரைப் பெற்றெடுத்தும்
அற்புத இளைமையில் மின்னுகின்றாள்!
அடையாளம் தந்தத் தமிழ்த்தாயை
அனைவரின் சார்பாக வணங்குகின்றேன்.

கவிச்சரத் தலைமை_வணக்கம்
*******************************
உள் மூச்சில் தமிழ் இழுத்து
வெளி மூச்சில் கவி படைக்கும்
கவிஞர் மற்றும் கவிச்சரத் தலைவர்
சகோதரி ஜோ. குமாரி எலிசபெத் அவர்களையும்
அன்போடு வணங்குகின்றேன்!

அவை வணக்கம்!
****************
தூரத்தில் பார்த்து வியப்பு கொண்டேன்!
தூரத்தை குறைத்து இணைத்துக் கொண்டேன்!
இருப்பினும் வியப்பு குறையவில்லை!
இதயத்தின் பிடிப்பும் மாறவில்லை!

தமிழ்ப்பட்டறைச் சிறப்பினை என்சொல்வேன்?
தமிழின் சிறப்பே அதுவென்பேன்!
ஆன்றோர் சான்றோர் இருக்கின்ற
அற்புத சபையை வணங்குகின்றேன்!

இயேசு பாலன் பிறப்பு
*********************
இன்பத்தை அனைவரும் அனுபவிக்க -நம்
இறைவன் இயேசு மனம் வைத்தார்!

அன்னை மேரிக்கு மகனாக- நம்
ஆண்டவர் இயேசு இறங்கி வந்தார்!

ஏழைத் தச்சரின் பிள்ளையாக- நம்
ஏக இறைவன் இயேசு வந்தார்!

அன்பினை உலகிற்கு எடுத்துச்சொல்ல- நம்
அன்பின் இயேசு பிறந்து வந்தார்!

உறவுகள் சந்திப்பு
*****************
அன்புள்ள உறவினர் வருகையிலே
அகத்தினில் இன்பம் ஊற்றெடுக்கும்!
அகிலமே உறவினர் ஆகையிலே
அகத்தினில் இறைநிலை பெருக்கெடுக்கும்!

அன்புள்ள உறவினை அன்பு செய்தால்
அதிலுள்ள மகிழ்வே தனியாகும்!
அன்பில்லா உறவையும் அன்பு செய்தால்
அதுதான் ஆண்டவர் குணமாகும்!

நன்றி நவில்தல்
****************
இனிய கிறுஸ்துமஸ் மற்றும்
இனிய புத்தாண்டு வாழ்த்தினைக்கூறி
வாய்ப்பளித்த அனைவருக்கும்
நன்றிகூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்!
வாழ்க வளமுடன்!

——செ. இராசா——-

https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=74 

No comments: