14/12/2017

சூழ்நிலை (சிறுகதைப்போட்டி-இது என் முதல் சிறுகதை)




#தமிழ்ப்பட்டறை புதினம் கதை எழுதும் பயிற்சி
________________________________________________________
தொடக்கம் : ----
முடிவு
******
சரிப்பா உன்முடிவை நீ சொல்லிட்ட அது உன் விருப்பம் .
என்முடிவை நான் சொல்றேன். என்னால அந்த இடத்தை விட்டு வரமுடியாது. எங்கே இருந்தாலும் நல்லபடியா இருங்க.
பேரனுங்க வந்தவுடன் பார்த்திட்டு இரவு கிளம்புகிறேன் என்றவரை திகைப்போடு பார்த்தான் மதன்.
_____________________________________________________________________________
ஒரு கிராமத்தில், மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான் மதன். தகுதிக்குமீறி படிக்கவைத்த தன் தந்தையைவிட்டு மதன் ஒரு நாள் கூட பிரிந்து இருந்ததே இல்லை. சிறுவயதிலேயே தாயை இழந்த சோகம்கூட வராத அளவு தன்னை பார்த்துக்கொண்ட தன் தந்தையின் மேல் மிகுந்த பாசம் கொண்டவன் மதன்.

கல்லூரியில் சேர்ந்த மூன்றாம் வருட முடிவில் அவனையே சுற்றி சுற்றி வந்த காவேரியை மணந்துகொண்டு இரு குழந்தைகளுக்குத் தந்தையானான். காலங்கள் உருண்டோடின.

அப்பாவைப்பிரிந்து மனைவி மக்களோடு நகரத்தில் வசிக்க வேண்டியநிலை மதனுக்கு வந்தது. மிகவும் வசதி வாய்ந்த நிலைக்கு மாறினான். கால ஓட்டத்தில் தன் தந்தைக்கு போன் செய்யக்கூட மறந்துவிட்டான்.

அன்றொரு நாள், பள்ளிக்கு சென்ற தன் மகனும் மகளும் வீட்டிற்கு நேரத்திற்கு வரவில்லை எனக் காவேரியும் மதனும் பதறிப்போய் பள்ளிக்கு போன் செய்தால், பள்ளி வாகனம் பழுதானதால் சற்று தாமதமெனக் கூறியதை அறிந்துகொண்டு நிம்மதி அடைந்தனர். ஆனாலும் மதனின் பதற்றம் மட்டும் அடங்கவே இல்லை. அப்பாவிற்கு போன் செய்து வரவழைத்தான்.

அப்பாவும் கிராமத்திலிருந்து தன் பேரன்களுக்கு, தன் தோட்டத்தில் இருந்து காய், பழங்கள் என அள்ளிக்கொண்டு வந்துசேர்ந்தார். "அப்பா...விவசாயமெல்லாம் வேண்டாம்ப்பா................எங்க கூடே இருங்கப்பா" என்றான் மதன்.

விவசாயத்தையும் விடமுடியாமல், தன் மகன், மருமகள், பேரன்களையும் விடமுடியாதவராய் அழுதபடியே, ஒரு வழியாக தன்னை தேற்றிக்கொண்டு ".ம் ..............சரிப்பா உன்முடிவை நீ சொல்லிட்ட அது உன் விருப்பம் .என்முடிவை நான் சொல்றேன். என்னால அந்த இடத்தை விட்டு வரமுடியாது. எங்கே இருந்தாலும் நல்லபடியா இருங்க. பேரனுங்க வந்தவுடன் பார்த்திட்டு இரவு கிளம்புகிறேன்," என்றவரை திகைப்போடு பார்த்தான் மதன்.

சேதுமாதவன்Group Admin சிறப்பு தம்பி அருமையான தொடக்கம்

Raja Manickam முதல் முயற்சி அண்ணா....அழைத்தமைக்கு நன்றி அண்ணா
சேதுமாதவன்Group Admin சிறப்பான கதையமைவு வாழ்த்துகள் தம்பி


No comments: