14/12/2017

மன்னியுங்கள்


தாயே தமிழ்த்தாயே....
தயவுகூர்ந்து கேட்கின்றேன்- உன்
பிள்ளைகளை மன்னியுங்கள்....

நீர் தந்த தமிழ்ப்பாலை
நிறைவோடு அருந்தாத- உன்
குழந்தைகளை மன்னியுங்கள்...

வள்ளுவனை பாரதியை
வளர்த்தெடுத்த தமிழ்த்தாயே- உன்
வலி(ழி) அறியாப் பிள்ளைகளை
வாஞ்சையோடு மன்னியுங்கள்....

“மம்மி டாடி” போதையிலே
மதியிழந்து போனாலும்
மறுவாழ்வு பெறவேண்டி
மனதார மன்னியுங்கள்....

அடிபட்டால் வருவார்கள்
“அம்மா அப்பா” என்று சொல்லி
அதுவரையும் தமிழ்த்தாயே
அன்போடு மன்னியுங்கள்....

—-செ. இராசா——

No comments: