06/06/2017

தொக்கி நிற்கும் கேள்விகள்



நாலுபேரு சொல்லிவிட்டால்
பொய்யும் மெய்யாகுமா?
காசுபணம் கூடிவிட்டால்
நட்பும் எதிர்ப்பாகுமா?


பொறாமையும் போட்டியும்
குடும்பத்தில் வேண்டுமா?
பொல்லாங்கு சொல்லுதல்
எவருக்கும் அடுக்குமா?

பெரியண்ணன் சொல்வதெல்லாம்
வேத வாக்காகுமா?
பெருங்குடும்பம் கலைந்துவிட்டால்
மரியாதை கிடைக்குமா?

உணவினை தடுப்பது
அறச் செயலாகுமா?
உறவினை கெடுப்பது
மறப் பண்பாகுமா?

நண்பனின் நண்பனாய்
இருந்திடல் வேண்டாமா?
நம்பினோர் வயிற்றினில்
அடித்திடல் நியாயமா?

வாழ்வின் சக்கரமும்
சுழல்வது தெரியுமா?
வாழ்வதும் வீழ்வதும்
கணித்திட முடியுமா?

No comments: