22/06/2017

சுழற்சி விதி / பணமும் கடனும்




(1)

பணம் வந்தால் கடன் நீங்கும்!
கடன் நீங்கினால் சுமை குறையும்!
சுமை குறைந்தால் வீடு அமையும்!
வீடு அமைந்தால் நல்வரண் வாய்க்கும்!
நல்வரண் வாய்த்தால் மணம் முடியும்!
மணம் முடிந்தால் மனம் குளிரும்!
மனம் குளிர்ந்தால் மழலை பிறக்கும்!
மழலை பிறந்தால் பொறுப்பு வரும்!
பொறுப்பு வந்தால் பொறுமை வரும்!
பொறுமை வந்தால் பணிவு வரும்!
பணிவு வந்தால் அன்பு விரியும்!
அன்பு விரிந்தால் சுற்றம் பெருகும்!
சுற்றம் பெருகினால் இன்பம் பெருகும்!
இன்பம் பெருகினால் செல்வம் குறையும்!
செல்வம் குறைந்தால் கடன் வரும்!
கடன் நீங்கிட பணம் வேண்டும்!
பணம் வந்தால் கடன் நீங்கும்! ..... (மீண்டும்)


(2)

கடன் இருந்தால் நிம்மதி போகும்!
நிம்மதி போனால் வாழ்வே கசக்கும்!
வாழ்வு கசந்தால் உலகம் வெறுக்கும்!
உலகம் வெறுத்தால் சினம் வெடிக்கும்!
சினம் வெடித்தால் வன்முறை பிறக்கும்!
வன்முறை பிறந்தால் மரணம் நிகழும்!
மரணம் நிகழ்ந்திட ஜனனம் எடுக்கும்!
ஜனனம் எடுத்தால் வாழ்ந்திட வேண்டும்!
வாழ்ந்திட வேண்டின் செல்வம் வேண்டும்!
செல்வம் வேண்டின் அறிவு வேண்டும்!
அறிவைப் பெருக்கிட கல்வி வேண்டும்!
கல்வி வேண்டின் பணம் வேண்டும்!
பணத் தேவைக்கு கடன் வேண்டும்!
கடன் இருந்தால் நிம்மதி போகும்!
(மீண்டும்)

No comments: