11/06/2017

எழுத்துக்கள் மட்டுமே சத்தியம் (எழுதியவனல்ல)




நட்பின் சிறப்புபற்றி
நான்கு வரியினிலே
நான்கு வருடம் முன்பாக
நானே எழுதியது;


"நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம்வரை
தொடர்வதுதான் உண்மையான நட்பு !!"

இவ்வரிகள் எழுதியமைக்கு...
இன்று நான் வருந்துகிறேன்
இறந்தவன் முகம்பார்க்க
இங்கிருந்து செல்லாமல்
மரணம் வரை தொடர்வதாக
வார்த்தைகளில் எழுதியுள்ளேன்!

வாழ்ந்துவிடத் தவறிவிட்டேன்!

மனத்தாலே மொழியாலே
மண்டியிட்டு வேண்டுகிறேன்
மன்னியுங்கள் இப்பாவியினை....

Sorry da Bose......
I'm not with you in your last moment.

No comments: