22/06/2017

நேற்றும் இன்றும்/ தீதும் நன்றும் பிறர்தர வாரா



இன்றைய தோல்வி வலிப்பதன் காரணம்
நேற்றைய வெற்றியால் துள்ளியதே!

இன்றைய இழப்பில் துவழ்வதன் காரணம்
நேற்றைய வரவால் ஆடியதே!

இன்றைய வாழ்வின் வறுமையின் காரணம்
நேற்றைய கர்மத்தின் வினையாலே!

இன்றைய சமூக நிகழ்வின் காரணம்
நேற்றைய தவற்றின் விளைவாலே!

இன்றைய அரசின் ஆட்டத்தின் காரணம்
நேற்றைய மெத்தனப் போக்காலே!

இன்றைய துரோகங்கள் வந்ததன் காரணம்
நேற்றைய கூடா நட்பாலே!

இன்றைய கொடுமைகள் நடப்பதன் காரணம்
நேற்றைய அலட்சிய மனத்தாலே!

இன்றைய நிகழ்வுகள் அனைத்தின் காரணம்
நேற்றைய சிந்தனைச் செயலாலே!

நாளைய நினைவுகள் இனித்திட வேண்டின்
இன்றைய நாளை அலங்கரிப்போம்!

"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
கூற்றினை மனதில் நிறுத்திடுவோம்!

கணங்கள் முழுமையும் உண்மையில் வாழ
கடின மனதைப் பழக்கிடுவோம்!

No comments: