22/06/2017

குடிமகனின் வகைகள்


குடிகார மனிதர்களை
குடிக்கின்ற அளவாலே
மூன்றாக பிரிப்பதாக
மூத்தகுடி மகனொருவன்
குடிபற்றி சொன்னதையே
குறிப்பாக எழுதுகின்றேன்!


வருடத்தில் என்றேனும்
விழாக்கால நாள்மட்டும்
விருந்தினர் மகிழ்விற்காய்
விருப்பம் இன்றி குடிப்பவனே
கவுரவக் குடிமகனாம்!

வாரத்தில் ஒருநாளில்
விடுமுறை நாள்மட்டும்
விழாபோல கொண்டாடி
விருப்பம்போல குடிப்பவனே..

ராஜகுடி என்பவனாம்!
வருடத்தின் நாள்முழுவதும்
விடுமுறை தினம்போல
விடாமல் குடிப்பவனே...
வீழ்ந்தே கிடப்பவனே..
பண்ணிக் குடிமகனாம்!

குடிமகனைத் தரம் பிரித்த
குடிமகனின் நிலை இன்று
மூன்றாகத் தரம் உயர்ந்து
முன்னேற்றம் அடைந்தானாம்!

சிறுகுடியோ பெருங்குடியோ
ராஜகுடியோ பண்ணிக்குடியோ
எந்தகுடி ஆனாலென்ன
எல்லாமே குடிதானே?!

பானையிலே சீனியிட்டு
பாகற்காயை அதிலபோட்டு
பலநாளு ஊறவைச்சா
படுங்கசப்பு மாறிடுமா?!

புத்திகெட்ட மனுசங்கிட்ட
புட்டிதொட வேணாமுன்னு
புத்திமதி சொல்லுப்புட்டா
புத்தியிலே ஏறிடுமா?!

No comments: