22/06/2017

சமூக வலைத்தளங்கள் (Facebook, WhatsApp...)



நல்லதும் கெட்டதும்
அலைவழி வந்திடும்!
வாழ்த்தும் வருத்தமும்
அதன்வழி சென்றிடும்!

பொம்மைக் குறியீடே
உணர்வாய் வெளியாகும்!
மனதின் எண்ணங்களோ
ஃபேஸ்புக் பதிவாகும்!

உறவின் நேசமெல்லாம்
வாட்சப்பில் உயிர் வாழும்!
தூரம் தொலைந்தாலும்
காலம் காலாவதியாகும்!

இங்கேதான்அனைவருமே
புகைப்படக் கலைஞர்கள்!
இங்கேதான் அனைவருமே
தத்துவ சிற்பிகள்!

பாடிடும் அனைவருமே
மனதினில் பாடகர்கள்!
எழுதிடும் அனைவருமே
மனதினில் கவிஞர்கள்!

மாயை உலகமிதில்
மயங்கிடார் யாருமுண்டோ?!

சரியாய் உள்ளதுபோல்
தவறும் இருக்கிறது
தவறாய் உள்ளதுபோல்
சரியும் இருக்கிறது

புலன்கள் அனைத்திற்குமே
ஓய்வு அவசியமே!

விரல்கள் ஓய்வுரவே
விரதங்கள் இருந்திடலாம்!
செவிகள் அமைதியுர
ஹெட்போன் தவிர்த்திடலாம்!


No comments: