தம்மக்கள் அனைவருமே
தலைநிமிர்ந்து நடந்திடவே
என்நேரம் உழைத்தவனை
ஏணியாய் இருந்தவனை
உறவுகள் மறந்திடுமா...?!
விண்ணோடு சென்றவிட்ட
என்னோட மனையாளின்
அன்பான தருணங்கள்...
அழியாத நினைவலைகள்
அதுமட்டும் மருந்தாகுமா....?!
உதிரத்தின் சொந்தங்கள்
எமைவந்து பார்த்திடவே
இருநூறு முறை வேண்டி
இருவிழிகள் தேடிடுதே
என்றேனும் வருவார்களா?!
இருநாட்கள் தங்கிவிட்டால்
அந்நாட்கள் நினைவினிலே
எந்நாளும் வாழ்ந்திடுவேன்
இவ்வுண்மைச் சேதியினை
யாரேனும் சொல்வீர்களா?!
(Photo courtesy Mr. Jegan Nath)
No comments:
Post a Comment