03/06/2017

சென்னை சில்க்ஸ்- உமக்கு எம் நன்றிகள்




இடம் தீயால் எரிந்தபின்னும்
இடர் தீயின் அனல் பொருத்து
இறைத் தீயின் வினையென்றே
இத்தீயை நீர் நினைத்து-உம்
இதயத் தீயில் நீரிறைத்தீர்!

கடைத் தீயால் ஊழியர்கள்
பயத் தீயால் மனதினிலே
பசித் தீயை நினைத்தார்கள்!
கொடும் தீயது பற்றாது
உளத் தீயினில் நீரிறைத்தீர்!

வாழ்வீர் நீர் பல்லாண்டு!
மீள்வீர் நீர் பலத்தோடு!

No comments: