03/06/2017

தற்பெருமை


தமிழ்மறைப் பெரும் புலவன்
தன்புகழைப் பாடிடவே- ஓர்
தனிக்குறளும் படைக்கவில்லை!
தனக்காகத் தன்னாலே
தனிப்பெயரும் வைக்கவில்லை!

ஞானத்தின் கருத்தெல்லாம்
ஞாலத்தின் பார்வைக்கு
ஞானியவன் தந்தபின்னும்
தன்நாமம் இதுவென்று
எங்கேயும் கூறவில்லை!

இங்கேயாம் இரு வரிகள்
இணைத்தேதான் எழுதிவிட்டால்
இளங்கவிஞர் எண்றெண்ணி
இறுமாப்பு கொள்கின்றோம்...
இருபுருவம் உயர்த்துகின்றோம்..

தற்பெருமை கொள்ளாத
தன்மையை யாம்கற்றிடவே
தரணிக்கு புரியவைத்த
தமிழன்னைத் தலைமகனைத்
தலைதாழ்த்தி வணங்கிடுவோம்!

தற்பெருமைக் குணமதனைத்
தலையினிலே ஏற்றாது
தமிழ்க்கிழவன் வழிநின்று
தனியாகத் தெரிந்திடுவோம்!
தமிழ்போல நிலைத்திடுவோம்!

No comments: