06/06/2017

நம்ம தல தோனி



இளம் வயதில்
முதல் வேலை
இந்தியன் இரயில்வேயில்...

ஒரு பக்கம் பணி ஓட்டம்
மறு பக்கம் கிரிக்கெட் ஆட்டம்
இரண்டிலுமே கால்வைத்து
இளைப்பாற நேரமில்லை...

ஒரு சமயம் பணியினிலே .
பிறர் செய்த தவறொன்று
தன்தலையில் விழுந்துவிட...
பழிச்சொல்லின் வார்த்தைகள்
இளநெஞ்சில் தைத்துவிட....
இடிவிழுந்த மரம்போல
இதயத்திலே ஐயத்துடன்
இனியென்ன செய்வதென?
பலவாறு தான் குழம்பி
பலநேரம் தனிமையிலே
பலகையிலே அமர்ந்திருந்தார்...

பக்கத்திலே ஓர் உருவம்
பகவானாய் வந்தமர்ந்து
வாழ்க்கையின் விளையாட்டை
விளையாடும் வழியதனை
ஒவ்வொன்றாய் கூறியது;

வாழ்க்கையும் கிரிக்கெட்டும்
விளையாடும் முறையொன்றே!
பிரச்சனைகள் பந்துகளாய்
பறந்தே வந்துவிடும்!
ஒவ்வொன்றும் ஒருவிதமாய்
யுக்தியுடன் ஆட வேண்டும்!

சில பந்தை அடித்திடனும்...
சில பந்தை தவிர்த்திடனும்..
தவிர்க்கும் பந்துகளை
அடித்திட நினையாதே!
அடுத்திடும் பந்துகளை
கணித்திட மறவாதே!

சிலநேரம் பிறர்நேரம்
சிரமத்தை பொறுத்துவிடு!

உன்நேரம் வரும்நேரம்
உதிரத்தில் சக்தியினை
உடனடியாய் கூட்டிவிடு!

மூத்தவர் கங்குலியின்
வார்த்தைகள் ஒவ்வொன்றின்
உள்ளர்த்தம் புரிந்ததுமே
உள்ளத்திலே பதித்துவிட்டார்
உயரத்தையும் அடைந்துவிட்டார்....

தலைமையைத் துறந்தாலும்
தலையினில் ஏற்றாத
தன்மையால் என்றென்றும்
தலையாய்த் திகழ்கின்றார்...

நம்ம தல தோனி.....

No comments: