07/06/2017

பிறப்பும் இறப்பும்


உயிராய்ப் பிறந்ததும் வைத்திடும் நாமம்!
உயிரை விட்டதும் பிணம் என்றாகும்!
தொட்டியில் தொடங்கிய உறக்கத்தின் பயணம்!
பெட்டியில் உறங்கிட மரணம் என்றாகும்!

இறந்திடும் உயிர்பின் எங்கே சென்றிடும்?
பிறந்திடும் முன்உயிர் எங்கே இருந்திடும்?
உண்மையை உணர்ந்தவர் எங்கே உள்ளனர்?
உணர்ந்தவர் உண்மையை எங்ஙனம் உரைப்பர்?

கருவரை தோன்றிய பிண்டங்கள் யாவும்
கல்லரை போவது காலத்தின் ஓவியம்!
சுயமாய் தோன்றிய பிம்பங்கள் யாவும்
சூன்யமாய் மறைவது புரியாத ரகசியம்!

ஆவதும் அழிவதும் கண்முன் காணினும்
ஆணவம் கர்வம் குறைந்திட வில்லையே!
பிறப்பும் இறப்பும் நம்முன் நடப்பினும்
பிறப்பின் நோக்கம் புலப்பட வில்லையே!

'ஆராரோ' ராகம் ஆனந்த கானம்!
'அய்யய்யோ' ராகம் முடிவின் சோகம்!
கானமும் சோகமும் வாழ்வின் கீதங்கள்!
பாடிடும் யாவரும் இறைவனின் ரூபங்கள்

No comments: