01/07/2022

கருப்பன் பாடல்- 2.0--( செங்கிடாக் கருப்பனுக்காக எழுதிய பாடல்)



மருதங்குடி வாழுகின்ற ஐயனாரு சாமிங்க
....வாளேந்தி கூடநின்னு காக்குறது யாருங்க?
....வாளேந்தி கூடநின்னு காக்குறது யாருங்க?
ம்ம்....வாடா.... கருப்பா....செங்கிடாக் கருப்பா!
 
மேகம் இடிஇடிக்குது; கருப்பன் வந்தால்
..........மின்னல் வெடிவெடிக்குது!
தேகம் துடிதுடிக்குது; கருப்பன் வந்தால்
.........திக்குத் தெறிதெறிக்குது!
ஊரே நடுநடுங்குது; கருப்பன் வந்தால்
.........உண்மை வெளிவருகுது!
பாரே படபடக்குது; கருப்பன் வந்தால்
..........பாரம் வலிகுறையுது?
 
அங்காளியும் பங்காளியும் ஒற்றுமையா வாழ்ந்திடனும்
சொந்தங்களும் பந்தங்களும் நல்லநாளில் சேர்ந்திடனும்
எங்கசாமி கருப்பன் முன்னே
எங்கசாமி கருப்பன் முன்னே
எல்லாருமே கூடிடனும்...
அந்தாப் பாரு கருப்பன் வர்றான்
இந்தாப் பாரு கருப்பன் வர்றான்
ஐயனாரு சாமியோட எங்கசாமி கருப்பன் வர்ரான்...
ம்ம்....வாடா.... கருப்பா....செங்கிடாக் கருப்பா!
 
அந்தசாதி இந்தசாதி ஒற்றுமையா வாழ்ந்திடனும்..
தென்புலத்தார் தெய்வமென்ன எல்லோருமே
புரிஞ்சிடனும்..
நம்மசாமி கருப்பன் முன்னே
நம்மசாமி கருப்பன் முன்ன
எல்லாருமே கூடிடனும்...
அந்தாப் பாரு கருப்பன் வர்றான்
இந்தாப் பாரு கருப்பன் வர்றான்
ஐயனாரு சாமியோட எங்கசாமி கருப்பன் வர்ரான்...
ம்ம்....வாடா.... கருப்பா....செங்கிடாக் கருப்பா!
 
✍️செ. இராசா

No comments: