15/07/2022

காமராசர் பத்து ---- குறள் வெண்பாக்கள்

 

கற்கக் கசடறக் கல்வியைப் போதிக்க
நற்செயல் செய்தவரே நீர்!
(1)
 
உணவோடு சேர்ந்தே உயர்கல்வி தந்த
குணவானில் நீரென்றும் குன்று!
(2)
 
கள்ளுக் கடைதிறந்த காவலர்கள் மத்தியில்
பள்ளிக் கொடைதந்தீர் பார்த்து!
(3)
 
படிக்காத மேதைதந்த பல்நோக்குத் திட்டம்
படித்தோரைத் தந்ததன்று பார்!
(4)
 
உன்பள்ளி மாணவனால் உன்னையே தோற்கடித்தோம்
என்னாச்சு? வாடுகிறோம் இன்று!
(5)
 
நீர்தந்த திட்டத்தால் நிம்மதியாய் வாழ்ந்தோமே
நீர்போல் எவருள்ளார் இன்று?
(6)
 
கர்மவீரர் என்றவுடன் கண்முன்னே தோன்றுவது
தர்மவான் நீரே தலை
(7)
 
எதிர்க்கட்சி ஆனாலும் ஏற்றிவிட்டீர் மேலே
எதிரிபோல் எண்ணுகிறார் இன்று
(8)
 
மக்களாட்சி தத்துவத்தை மண்தோண்டி போட்டுவிட்டு
வக்கனையாய்ப் பேசுகிறார் வந்து
(9)
 
காங்கிரசை நீரன்று கைதூக்கி விட்டதினால்
ஓங்கி உயர்ந்தவர்தான் உண்டு
(10)
 
✍️செ. இராசா

No comments: