08/07/2022

 







பிள்ளைகளுக்கு இரயில் பயண அனுபவங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் விரைவுவண்டியில் முன்பதிவு செய்தோம். உண்மையில் அவர்களுக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தாலும் இந்த அனுபவம் தேவையென்றே நினைக்கிறேன். 
 
இரயில் இருக்கைகள் விமான இருக்கைகள்போல் இருந்தாலும் அகலம் குறைவாக உள்ளதால் தாராளமாக அமர முடியவில்லை. தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதி, சாப்பிட, புத்தகங்கள் வைக்க, கைப்பேசி மின்னூட்டம் போட என பல வசதிகள் இருந்தாலும், மின்விசிறிகளின் காற்று போதுமானதாக இல்லை. நாங்கள் அமர்ந்த இடத்தில் சாளரமும் இல்லையென்பதால் சுத்தமாக காற்றே இல்லை. கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும், பயணச்சீட்டின் விலை மிக மிகக் குறைவாகவே உள்ளதால் பலபேருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 500 கிமீ பயணம் வெறும் 200 ரூபாயில் என்பது, தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான ஒன்றே. கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமே சாத்தியமான ஒன்று இது.
 
இந்தக் கதவுக்குப் பக்கத்தில் கழிப்பறை போகுமிடத்தில் கூட்டமாக அடைத்துக்கொண்டு நிற்பவர்களை மட்டும் எப்போதும் கட்டுப்படுத்தவே முடியாதுபோலும். எது எப்படியோ நல்லபடியாக ஊர்வந்து சேர்ந்தோம்

No comments: