04/07/2022

நாகை கூடுகை-2

 



பொண்மணியார் வாழும் புகழ்மிக்க நாகையில்
அண்ணாவைக் காணவந்தோம் அங்கு!
(1)
 
சென்னைவாழ் கோவலரும் திட்டகுடி பாவலரும்
அண்ணனெங்கள் விக்டரும் அங்கு!
(2)
 
நானெனும் மண்குடமும் நாகைக்கு வந்திடவே
ஆனதெங்கள் எண்ணிக்கை ஐந்து!
(3)
 
தேநீரில் நாநனைத்தோம் செந்தமிழில் தேன்குடித்தோம்
பாநீரில் மூழ்கிவிட்டோம் பார்த்து
(4)
 
சங்க இலக்கியத்தைச் சாறாக்கி அப்படியே
எங்களண்ணா தந்தார் இசைந்து
(5)
 
கம்பர் கவிக்கோ கவியரசர் எல்லோரும்
நம்முன்னே நின்றனர் நன்கு!
(6)
 
புல்லட்டு பாடலுக்கும் போட்டவித்தை யாதென்று
கல்கண்டாய் தந்தார் கனிந்து!
(7)
 
மீன்இறால் நண்டென்று வீட்டில் சமைத்துவந்து
ஊண்தந்த பொன்மணியார்; தாய்!
(8)
 
அவரவர் அச்சிட்ட அற்புத நூல்கள்
எவருக்கும் கிட்டிய(து) அங்கு.
(9)
 
இருநாள் நினைவை இதயத்தில் ஏற்றி
வரும்நாளில் வாழ்வோம் இனி!
(10)
 
✍️செ. இராசா
 
(அற்புதமான இலக்கியச் சந்திப்பை உருவாக்கிக் கொடுத்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏)

No comments: