25/07/2022

ஔவைத் திங்கள்-001------------- தலைப்பு---அம்மா----தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை

 

அம்மா எனும்போதே ஆத்மாவில் பூச்சொரிந்தால்
அம்மாவின் அன்பே அது!
(1)
 
அம்மா அருகிருந்தால் ஆலயமும் தேவைமில்லை
அம்மாதான் வாழும் அணங்கு!
(2)
 
உண்ட உணவுபற்றி ஓயாமல் கேட்கின்ற
அன்பின் உருவே அவள்.
(3)
 
தப்பான பிள்ளைத் தறிகெட்டு போனபின்னும்
அப்போதும் ஈவாள் அவள்
(4)
 
மகனின் அழைப்பை மனதிற்குள் எண்ணி
நகரும் கணத்திலவள் வாழ்வு
(5)
 
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டிவிட்ட தாயை
மதியாதார்க் கில்லை மதிப்பு
(6)
 
தாரத்தின் முன்பாக தாயை வதைப்பவன்
சீரங்கம் போனாலும் சீக்கு
(7)
 
பெண்களுக்கே உள்ள பெரும்பேறு யாதென்றால்
உண்மையில் தாய்மை உணர்வு
(8)
 
அன்பும் கருணையும் ஆத்மாவின் உள்ளிருந்தால்
அன்னைபோல் ஆகலாம் நீ
(9)
 
கண்முன்னே வாழும் கடவுளைக் காணாமல்
விண்வெளிக்கேப் போனாலும் வீண்
(10)
 
✍️செ. இராசா

No comments: