13/07/2022

கட்டுரை-4 --- எளிய முறையில் உடம்பைக் குறைப்பது எப்படி?

 

பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், அரிசி சாப்பாடு சாப்பிட்டால் உடம்பு வைக்கும், அதுவே சப்பாத்தி சாப்பிட்டால் உடம்பு வைக்காது என்றெல்லாம் தவறான புரிதலில் உள்ளார்கள். நல்லாத் தெரிஞ்சுக்குங்க எல்லா உணவுக்குமே கலோரி கணக்கு உண்டு. அதைத் தெரிந்து கொண்டால்தான் நாம் உடம்பு போடாமல் தப்பிக்க முடியும். அது சரி....கலோரியை எப்படி கணக்கு வைப்பது?! வாங்க ஒரு உதாரணம் மூலமாக பார்ப்போம்.
 
இப்ப ஒரு கோப்பை தேநீர் செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் அது தரும் கலோரி ஆற்றல் பற்றி பார்ப்போம்.
 
தேநீர்ப்பை அல்லது பொடி- 3 கலோரி
பால் (200மிலி)- (42 க/100ml)- 84 கலோரி
சர்க்கரை - 2 tbsp- (25/ 1 tbsp)- 50 கலோரி
ஆக மொத்தம் -- 137 கலோரி....
 
இப்ப நாம பால் ஊற்றாமல் சாப்பிட்டால் என்னாகும். பார்ப்போமா?!
 
தேநீர்ப்பை அல்லது பொடி- 3 கலோரி
சர்க்கரை - 2 tbsp- (25/ 1 tbsp)- 50 கலோரி
ஆக மொத்தம் -- 53 கலோரி....
 
இப்ப நாம பால் ஊற்றாமல் சர்க்கரை போடாமல் சாப்பிட்டால் என்னாகும். பார்ப்போமா?!
தேநீர்ப்பை அல்லது பொடி- 3 கலோரி
ஆக, வெறும் 3 கலோரி மட்டுமே.... 
 
இப்படி நாம ஒவ்வொரு உணவுலயும் கொஞ்சம் கவனமா சிலவற்றை தவிர்த்தோ அல்லது குறைத்தோ சாப்பிட முடியுமா முடியாதா?
 
உதாரணமாக, இட்லி சட்னி பற்றி பார்ப்போமோ?
இட்லி- 70 கலோரி * 4 எண்ணிக்கை - 280 கலோரி
சட்னி- 25 கலோரி/ 1 கரண்டி- 2 என்றால்- 50 கலோரி
ஆகமொத்தம் - 310 கலோரி....
 
அதுவே சாம்பார் என்றால் 1 கப் சாம்பார்- 150கலோரி....ஆக (280+150) - 430கலோரி. 
 
இப்பப் புரியுதா? கலோரி எப்படி கூடுகிறதென்று. இதில் மேலும் சாம்பார், சட்னி, வடை....என்று கூட்டிக்கொண்டே போனால் என்னவாகும்...1000 கலோரியில் வந்து நிற்கும். நாம் ஒரு நாளைக்கே 2300 கலோரி என்ற கணக்கில் சாப்பிடலாமென்றால் காலையிலேயே கட்டிவிட்டால் எப்படி?! ஆக...கலோரி கணக்கீடு பற்றி தெரிவது நமக்கு இங்கே அவசியமாகிறது.
அனைத்து சாப்பாடு பற்றிய கலோரி அளவும் இணையத்தில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை 4 என்ற கணக்கு சரியாக இருக்குமென்றே நினைக்கிறேன். அதாவது 4 இட்லி- 280 கலோரி (அ) 4 எண்ணெய் போடாத தோசை- 400 கலோரி (அ) 4 எண்ணெய் போடாத சப்பாத்தி- 400 கலோரி (அ) 4 சிறிய பூரி -400 கலோரி உள்ளவாறு பார்த்துக்கொண்டு சட்னி சாம்பாரை மிகக்குறைந்த அளவில் தொட்டுக்கொண்டால் காலையில் எந்த உணவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.
 
இதேபோல் தான் மதியமும் இரவும் கணக்கு வைத்துக் கொள்ளவேண்டும். இல்லையில்லை நான் சற்றே கூடுதலாக சாப்பிடுபவன் என்றால், நாம் கலோரியை எரிக்கும் அளவிற்கு நம் உடலுழைப்பைக் கூட்ட வேண்டும் அவ்வளவே. ஆனால் ஒரு விடயம்; ஒரு மணிநேரம் நடந்தால்கூட 200 கலோரிதான் எரியும். அதற்கு ஒரு வடை சாப்பிடாமல் வாயைக் கட்டினாலே போதும். காரணம் ஒரு வடையில் 200 கலோரி உள்ளது.
 
அது சரி, ஏற்கனவே கூடிய உடம்பை எப்படிக் குறைப்பது? 
 
---தொடரும்

No comments: