24/04/2022

#மெட்டுக்கு_எழுதிய_இஸ்லாம்_பாடல்

 


பாங்கினோசை கேட்டால் யா அல்லாஹ் - யாரும்
பள்ளிபோகக் கூறும் யா அல்லாஹ்
பாங்கினோசை கேட்டால் யா அல்லாஹ்-யாரும்
பள்ளிபோகக் கூறும் யா அல்லாஹ்
 
மீளவேணும் ஆமின் யா அல்லாஹ்
மீளவேணும் ஆமின் யா அல்லாஹ்
மீட்டவேணும் அல்லா யா அல்லாஹ்
 
திருக்குரான் கூறுகின்ற
அருள்நெறிக் கொள்கையினை
கேட்கிற யாவருக்கும்
கிட்டுவது சொர்க்கமன்றோ..
 
முகம்மது நபிகூற்றை
அகமதில் ஏற்றுகின்ற
அத்தனை மனிதருக்கும்
அற்புதம் நேருமன்றோ...
 
நேர்மையில் ஈட்டுகின்ற செல்வத்தில் சிறுதுளியை
ஏழ்மையில் வாழ்கின்ற ஏழைகள் நிலையறிந்து
கொடைதர வேண்டும் என்றான் யா அல்லாஹ்
கொடைதரும் வள்ளல் நீரே யா அல்லாஹ்
 
✍️செ. இராசா

No comments: