20/04/2022

வரவேற்கிறேன்

 


முதல்வர் பதவியேற்றபின் 09.06.2021 அன்று மூன்று கோரிக்கைகளை எழுதி மின்னஞ்சல் வழியாக அனுப்பியிருந்தேன். அதை அப்படியே முகநூலிலும் பகிர்ந்திருந்தேன். இதையெல்லாம் முதல்வர் பார்ப்பாரா என்று சில நண்பர்கள் கேலியாகக்கூட கேட்டார்கள். ஆனால், எண்ணத்திற்கு வலிமை உண்டென்பதை ஆன்மீகப் பூர்வமாக மட்டுமல்லாமல் ஆராய்ச்சிப் பூர்வமாகவும் அணுகுகின்றவன் என்கின்ற ரீதியில் மாற்றத்தை எதிர்பார்த்தேன்.
நான் அனுப்பிய கோரிக்கைகளில் உள்ள அந்த இரண்டாம் வேண்டுகோளை அப்படியே
இங்கு வழங்குகின்றேன்.
இதோ;
 
2. தாய்த் தமிழுக்காக ஓர் வேண்டுகோள்
***********************************************
என்னதான் நாம் தமிழ்... தமிழ்.. என்று பேசினாலும், தமிழ்நாட்டில் பேச்சுத்தமிழ் தமிங்கிலீஸாய் மாறிவருவது தமிழார்வலர்கள் மத்தியில் மிகவும் வேதனையளிக்கிறது. பத்து வார்த்தைகள் பேசினால் அதில் ஐந்து வார்த்தைகள்தான் தமிழாக உள்ளது. இதில் கிராமத்தைவிட நகரத்தில் இந்த விகிதாச்சாரம் கூடுதலாக உள்ளது. இவற்றை மாற்றும் பொறுப்பு நம் ஊடகங்கள் அனைத்திற்குமே உள்ளது. ஆனால் அவர்களோ மக்கள் மேல் பழியைப் போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். ஆகவே அனைத்து ஊடகங்களையும் கூட்டி ஒரு சிறப்புக் கூட்டம் போட்டு தாங்கள் பேசினால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை விடுக்கின்றேன்.
இனிய மனமார்ந்த நன்றி முதல்வர் அவர்களே...
✍️செ. இராசா
(நல்லதை வாழ்த்துவோம்
அல்லதைத் தூற்றுவோம்)
 
என் நட்பில் உள்ள பத்திரிகை நண்பர்கூட, நான் பதிவிட்ட சில நாட்களில் அவர் வேலை பார்க்கும் மிக முக்கியமான பத்திரிகையில் என்னைப்போலவே வேறு சில கோரிக்கைகளை அனுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ நல்லது நடந்தால் சரி தான்.
 
(முதல் பின்னூட்டத்தில் முகநூல் பதிவின் இணைப்பு உள்ளது).

No comments: