24/04/2022

கேள்விகள் பத்து

  


#கேள்விகள்_பத்து

தென்னாட்டார் எல்லாம் திராவிடர் என்றானால்
எந்நாட்டார் நாமெல்லாம் இங்கு?
(1)

திராவிடத்திற் குள்ளேதான் செந்தமிழர் என்றால்
திராவிடம் தேவையா சொல்?
(2)

இந்தியக் கட்டமைப்பில் ஏமாற்றம் உள்ளதெனில்
சிந்தையில் உள்ளதென்ன செப்பு?
(3)

ஆரியர்தான் அத்தனைக்கும் ஐயமில்லை என்றாலும்
சேரிநிலை மாறியதா செப்பு?
(4)

அங்கிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்போரே
எங்கிருந்து வந்தீர்நீர் இங்கு?
(5)

தமிழ்தமிழ் என்றே தமிழ்நாட்டை ஆளும்
தமிழல்லார் நாடாநம் நாடு?!
(6)

எத்தனைநாள் ஆண்டீர்கள் ஏனிங்கே சாதிவெறி?
இத்தனைக்கும் காரணம்யார் இங்கு?!
(7)

சாதிய ஓட்டுக்காய் சத்தியத்தை விற்றிங்கே
ஊதிக் கொளுத்தவர்யார் சொல்?
(8)

மதுவெள்ளம் மேலேறி மாநிலத்தை ஓட்டும்
புதுமுறையின் தந்தை-யார் சொல்?
(9)

சாதியைச் சொல்லியே சந்திக்கும் தேர்தலில்
நீதிநிலை வென்றதா சொல்?!
(10)

✍️செ. இராசா

No comments: