22/04/2022

அவர்களுக்குத் தெரியவில்லை

 

அவர்களுக்குத் தெரியவில்லை
அவர்கள் யாருக்காகக்
கொடி பிடிக்கிறார்கள் என்று!
 
அவர்கள் கடவுளே இல்லையென்பார்கள்!
அவர்களின் மனைவிகளோ
இருக்குதென்பார்கள்
கேட்டால்...
அது அவர்களின் உரிமையென்பார்கள்
பாவம்..
அங்கே இவர்களும் கொடிபிடிப்பார்கள்..
 
அவர்கள் சாதி இல்லையென்பார்கள்!
அவர்களின் படிவத்திலோ
சாதிபற்றிக் கேட்பார்கள்..
கேட்டால்‌‌..
அது அரசியல் வழக்கென்பார்கள்...
பாவம்..
அங்கே இவர்களும் கொடிபிடிப்பார்கள்..
 
அவர்கள் ஹிந்தி வேண்டாமென்பார்கள்..
அவர்களின் பள்ளிகளிலோ
ஹிந்தி வைப்பார்கள்..
கேட்டால்...
அது தனியார் பள்ளியென்பார்கள்
பாவம்..
அங்கே இவர்களும் கொடிபிடிப்பார்கள்..
 
ஆக‌...
அவர்கள் அப்படித்தான்‌.‌..
இவர்களும் இப்படித்தான்...
இங்கே நாமும்...
இப்படியேதான்...
 
✍️செ. இராசா

No comments: