02/04/2022

உன்னை யார் அடித்தாலும்

 

அம்மாவோ..
அம்மணியோ..
உன்னை யார் அடித்தாலும்
உன் கண்ணீரை ஏந்துபவன் நான்தான்....

இல்லமோ..
ஆலயமோ..
நீ எங்கே உடைந்தாலும்
உன்னைக் கரமேந்தித் தாங்குபவன் நான்தான்....

உள்ளேயோ..
வெளியேயோ..
நீ எங்கே இருந்தாலும்
உன்னை அப்படியே கடிப்பவன் நான்தான்...

பாலாகவோ
பண்டமாகவோ
நீ எப்படி மாறினாலும்
உன்னை அப்போதும் ருசிப்பவன் நான்தான்...

ஆம்‌...நானேதான் தேங்காயே...

No comments: