05/04/2022

அரசியல் பதிவல்ல ------- பகுத்தறிவுப் பதிவே

 


தமிழ்நாடு அரசு பள்ளிப் பாட நூல்களில் நாம் ஏற்கெனவே அறிந்த பல தலைவர்களின் பெயர்களில் இருந்த சாதியப் பெயர்களை நீக்குவதாக அறிவித்து அதைத் தற்போதைய அரசு உடனடியாக செயல்படுத்துவது வரவேற்கத்தக்கதே. ஆனால் அவற்றில் சில சந்தேகங்கள் எழுவதால் அதைத் தெளிவுபடுத்தும் பொறுப்பும் அரசுக்கே உள்ளது. (இதைப் படிக்கும் பெரிய ஆளுமைகள் மேலிடம் கொண்டு செல்வார்களேயானால் இப்பதிவின் நோக்கம் நிறைவேறலாம்) அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை இப்போது சுந்தரனார் ஆகியுள்ளார் சரி, ஆனால் நாட்டுப்பண் எழுதிய இரவீந்திரநாத் தாகூரில் ஏன் இன்னும் #தாகூர் ஒட்டிக்கொண்டுள்ளது?!. தாகூர் சாதியப்பெயர் இல்லையா?! இதேபோல் படேல் மற்றும் காந்தி போன்ற பெயர்களெல்லாம் என்ன? இதேபோல் சிங், ஜெயின், ரெட்டி, நாயுடு, மேனன்.... போன்ற இன மத அடையாளப் பெயர்களையெல்லாம் என்ன செய்யலாம்?!
 
அதைவிடப் பெருத்த சந்தேகமொன்று இருக்கிறது. நம்ம ஊரில் #பெரியார் என்று அவர் பெயரில் பேர்வைத்த படக்குழுவினர், அதையே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யும்போது #பெரியார்_ராமசாமி_நாயக்கர் என்று வைத்தார்களே அது ஏன்? சாதியம் வேண்டாம் என்று சொன்ன தலைவர் படத்தை சாதியப்பெயரில் விட்டால்தான் படம் ஓடுமென்று சொல்லும் உருட்டுக்கள் எல்லாம் சரியா? எனில் உண்மையில் சாதியம் யாருக்குத் தேவைப்படுகிறது?
 
அடுத்து MLA, MP சீட்டுக்கான விண்ணப்ப படிவங்களில் ஏன் இன்னும் எந்த சாதியென்றும் சாதிய ஓட்டுக்கள் எத்தனையுள்ளது என்றும் கேட்கும் விதமாக கட்சியினர் இடம் வைத்துள்ளார்கள்?! தேர்தலின் போது இந்த சாதியைச் சேர்ந்தவர்தான் நிற்கின்றார்கள் என்பதை அறிவிக்கும் ஊடகங்களை, வேட்பாளரை அல்லது கட்சிகளை தண்டிக்கும்படி ஏதேனும் மாற்றம் கொண்டவர இயலுமா? பள்ளிகளிலேயே இன்னும் சாதியச் சான்றிதழ் தேவைப்படுகிறதே...அதை என்ன செய்யவுள்ளீர்கள்?! இதையெல்லாம் செய்யாமல் ஏதோ சிலவற்றை பேருக்கு மாற்றுவது கண்துடைப்பு வேலையில்லையா?!..
 
தயவுகூர்ந்து உண்மையில் நடவடிக்கைகள் எடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். இல்லையேல்.....இந்த நாடும் நாட்டுமக்களும் இப்படியே போகவேண்டியதுதான்.
 
என்ன நான் கேட்பது சரிதானே?!!
 
✍️செ. இராசா

No comments: