11/04/2022

நகலிசைக் கலைஞனா நான்

 


நகலிசைக் கலைஞனா நான்- இறைவா
அசலிசைக் கவிஞனே நான்....
நிழலிசைக் கலைஞனா நான்?- இறைவா
நிசவிசைக் கவிஞனே நான்....

உயிரிசை எந்தன் மூச்சு
உதட்டிசை எந்தன் பேச்சு
இமைஇசை டிக்டிக்காச்சு
இறைஇசை லப்டப்பாச்சு

குருதிநீர் ஓடும் சப்தம்
...‌‌.....குதித்தெழும் தொம் தொம் தொம் தொம்!
குடல்வழி போகும் சப்தம்
.......‌கூடிடின் டொம் டொம் டொம் டொம்!
இரண்டுகை தட்டும் சப்தம்
....‌‌...எழுப்பிடும் டப் டப் டப் டப்!
இணைகையில் கேட்கும் சப்தம்
........ஐயையோ ம்....கூம்....சட் டப்!

நகலிசைக் கலைஞனா நான்- இறைவா
அசலிசைக் கவிஞனே நான்....
நிழலிசைக் கலைஞனா நான்?- இறைவா
நிசவிசைக் கவிஞனே நான்...

இசைந்திடும் போதில் அங்கே
.....இசைப்பவன் யாரோ யாரோ?
இசைத்திடும் போதில் அங்கே
....இரசிப்பவன் யாரோ யாரோ?!

இசைஞனும் நானே நானே...
....இரசிகனும் நானே தானே..
கலைஞனும் நானே நானே..
....ருசிஞனும் நானே தானே...

உயிரிசை எந்தன் மூச்சு
உதட்டிசை எந்தன் பேச்சு
இமைஇசை டிக்டிக்காச்சு
இறைஇசை லப்டப்பாச்சு

✍️செ. இராசா

No comments: