26/04/2022

மதுவுண்ட கோப்பைக்குள் ......விழுந்துள்ள எறும்பே

 



மதுவுண்ட கோப்பைக்குள்
......விழுந்துள்ள எறும்பே
மதிகொண்டு மேலேறும்
......மார்க்கத்தை விரும்பே
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு
 
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
 
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு
 
துறந்தவர் நெஞ்சைக் கூட உன் நினைப்பு
கொல்லுமந்த ஈர குணமே..
மறந்தவர் நெஞ்சைக் கூட உன் ஜொலிப்பு
வெல்லுமந்த தீர மனமே
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு
கடந்து வந்த பல பாதை- உன்
கனவை வெல்ல அது தேவை.. (2)
 
பபா பாபா பபா பாபா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா\
 
பொய்யில் வாழ்கிறவர்
பொழியும் பொய்கள் கண்டு அம்மம்மா
என்ன வாழ்க்கையென்று
எண்ணம் தோன்றுகையில் அம்மம்மா..
பொய்யைக் கண்டும் எண்ணம் மாறும்
பொய்யும் மெய்யாய் இங்கே தோன்றும்..
 
உண்மைபோலே உலகத்தில் வேறில்லையே
உன் மெய்..தான் உனையேற்றும் வேறில்லையே..
உந்தன் தேடல்களில் நீ நீயாயிரு..
எண்ணம் மாறாமலே என்றும் மாறாதிரு..
 
✍️செ. இராசா

No comments: