04/04/2022

கவிதைகள்

 

கவிதைகள் பரிசுத்தமானது
எத்தனைபேர் ருசித்தாலும்...
 
கவிதைகள் இலகுவானது!
எத்தனை பொருள் வைத்தாலும்...
 
கவிதைகள் கனமானது!
பொருளில்லா வறுமையிலும்...
 
கவிதைகள் உயர்வானது‌!
பள்ளத்தைக் காட்டினாலும்....
 
கவிதைகள் கோபுரமானது!
குப்பைகளைச் சொன்னாலும்‌.‌...
 
கவிதைகள் நிலையானது!
கவிஞனே மரித்தாலும்‌...
 
✍️செ. இராசா

No comments: