02/04/2022

எட்டி எட்டிப் பார்க்குறேன் எதுவும் தெரியல...

 


எட்டி எட்டிப் பார்க்குறேன்
எதுவும் தெரியல...
இன்னுமேறப் பார்க்குறேன்
ஏனோ முடியல...

பட்டி தொட்டி நோக்குறேன்
பாயத் தெரியல...
பாதைதேடி ஓடுறேன்
காண முடியல..

முட்டி முட்டிப் பார்க்குறேன்
ஒன்னும் புரியல..
மூர்க்கமாக முட்டுறேன்..
முட்ட முடியல...

தட்டி தட்டிப் பார்க்குறேன்
கதவு திறக்கல...
சாமிகிட்ட கேக்குறேன்
பதிலே கொடுக்கல...

✍️செ. இராசா

No comments: