13/09/2021

தனிமை

 


உணர்வோடு உறவாடி
உருவாய் உலவுகிறது
கவிஞனின் தனிமை

தன்னிலே கரைந்து
தன்னையே தொலைக்கிறது
சித்தனின் தனிமை

இல்லா உருவையும்
எழுப்பி விடுகிறது
ஓவியனின் தனிமை

ஒளிந்த உருவத்தைத்
தோண்டி எடுக்கிறது
சிற்பியின் தனிமை

பிரபஞ்ச இரகசியத்தைக்
கருவியால் காண்கிறது
விஞ்ஞானியின் தனிமை

அண்ட இரகசியத்தை
தன்னுள்ளே காண்கிறது
ஞானியின் தனிமை

அனைத்தையும் கொடுத்தும்
அமைதியாய் இருக்கிறது
சூன்யத் தனிமை

✍️செ. இராசா

No comments: