27/09/2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்--புறநானுறு

 #புறநானுறு- (முதல் நூற்றாண்டு)
#PURANANURU(1st Century) 1st BCE

#புறம்_192 (POEM 192)
#கணியன்_பூங்குன்றனார் (KANIYAN POUNGUNDRANAAR)

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

#பொருள்

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை பிறரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் என்பது புதியது இல்லை, வாழ்தல்
இனியது என்று மகிழ்ந்ததும் இல்லை
வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

வானத்தின் குளிர்ந்த மழைத் துளியானது,
கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு ஓடும் பேராற்றின்
நீர்வழி தடத்திலே போகும் மிதவை போல, அரிய உயிரியக்கமானது
இயற்கைவழி போகத் தான் செய்யும் என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லிய காட்சியில் தெளிந்தோம், ஆதலினால் பிறந்து வாழ்வோரில்
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

#ENGLISH_TRANSLATION

Every town our home town, Every man our relatives
Good and evil do not come from others.
Even pain and relief come of themselves.
Dying is nothing new.
We do not rejoice that life is sweet nor call it bitter.

after a downpour from skies, the rain drop
sounding and dashing across the rocks and river
Over water course as rafts drifting in the rapids of a great river
Our lives, however dear, follow their own course,
we know this from the vision of men who see.

So, we are not amazed by the great,
and we do not scorn the little.

No comments: