06/09/2021

பழுகும்முன் யோசி ----- வள்ளுவர் திங்கள் 175

  


#வள்ளுவர்_திங்கள்_175
#பழுகும்முன்_யோசி

படகில் துளையிருக்கப் பாராமல் விட்டால்
படகின் நிலையெண்ணிப் பார்
(1)

இருக்கையில் தூற்றி இறந்தபின் போற்றும்
ஒருகுணம் ஏனோ உணர்
(2)

உடனேப் பழகி உடனேப் பிரிவோர்
விடமே அவரை விடு
(3)

முறைசொல்லி முன்னே முறையாகப் பேசி
குறைசொல்லல் தீயோர் குணம்
(4)

பற்றுபோல் காட்டிப் பகடாய்ப் பழகுவோர்
புற்றுநோய் என்றாகும் போக்கு
(5)

சிறுஞ்செய்கை செய்யும் சிறியோரைக் கண்டால்
வெறுப்பின்றி நீயும் விலகு
(6)

தான்தான் எனச்சொல்லும் தற்குறிகள் எந்நாளும்
வீண்தான் எனயெண்ணி வெட்டு
(7)

பணம்பணம் என்றேப் பழகும் உறவு
மணம்மனம் இல்லா மயிர்
(8.)

பொறாமை குணத்தோடு பொய்சொல்லும் நட்பைப்
பெறாமை இருந்தாலே பேறு
(9)

நயமாய் உறவாடி நஞ்சினைக் கக்கும்
கயமை நிலைக்காது காண்
(10)

✍️செ. இராசா

No comments: