14/09/2021

நீட்டைத் தடுப்பதுபோல்- அன்று நீட்டி முழங்கினீரே

(நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த சேலம் தனுஷின் நினைவலைகள் மறைவதற்குள் அரியலூரில் கனிமொழி என்கிற மாணவி தூக்கிட்டு தற்கொலை)

என்ன அரசியலோ?- இது
என்ன அரசியலோ?
இன்னும் விடியலையோ?- ஏன்
இன்னும் விடியலையோ?

நீட்டைத் தடுப்பதுபோல்- அன்று
நீட்டி முழங்கினீரே - இன்று
நீட்டைத் தடுத்தீரோ?- கால்
நீட்டிப் படுத்தீரோ?!

சாவுகள் கூடுதய்யா- பலர்
நோவுகள் கூடுதய்யா- உம்
ஈவு இரக்கமெல்லாம் - ஏன்
லீவுலே போனதய்யா?!

பாவலர் நாவலரே- தமிழ்
ஆர்வலர் காவலரே- நீர்
யாவரும் ஆவலுடன்- இன்னும்
போவதைக் காண்பீரோ?!

ஊடக நண்பர்களே- பெரும்
பூடக வாசிகளே- இந்த
நாடக ஆட்டங்களை- நீர்
சாடவே மாட்டீரோ?!

--செ. இராசா 

No comments: