13/09/2021

 



நீளத் தொட்டி ஒன்றில்
நிறைய நீருற்றுகள்...
நிறம் மாறும் மின்விளக்கில்
நிஜம் மாறும் அதிசயங்கள்...
 
தடதடக்கும் ஓசையுடன்
தனைக்காட்டும் போட்டிகள்..
தாமே உயரமென்று
தமக்குள்ளே சர்ச்சைகள்...
 
ஓடிய எந்திரம்
ஓய்ந்தபின்தான் தெரிந்தது;
நீரூற்று என்பதே
நீரின் மாயையென்று...
 
✍️செ. இராசா

No comments: