09/09/2021

அருணகிரிநாதர் சந்தத்தில்----------- இது இராசாவின் பாட்டு

 


சக்திக்கொரு முத்துத் திருமகன்
முக்திக்கிறை சித்தப் பெருமகன்
சித்தம்தர நித்தம் மனமுற
..........................தொழுவோமே
 
கற்றோர்சபைக் கற்போர் குழுமிட
கற்கும்பலர் கற்றல் பரவிடக்
கற்கண்டெனக் கற்கும் கலையென
.........................வருவோனே
 
பற்றும்கரம் பற்றல் நிலைபெற
முற்றும்சிரம் முட்டித் தரைதொட
கற்றுக்கொடு சுற்றம் சுகம்பெற
........,..................கணநாதா
 
தட்டிக்கொழுக் கட்டைத் தருவதைக்
கட்டும்வரை கட்டிக் கழித்திட
பட்பட்டென பக்கம் சடுதியில்
......,....................வருவாயோ
 
✍️செ. இராசா
 
 
இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்

No comments: