11/06/2019

மனிதன் என்கிற கணிப்பொறியில் (Computer)



மனிதன் என்கிற கணிப்பொறியில் (Computer)
மனது என்பது மென்பொருளே (Software)
உடல் என்கிற வன்பொருளில் (Hardware)
உயிராய் இருப்பது மின்கலமே...
(Battery)

மென்பொருள் கொண்டு இயங்குகின்ற
நம்மன ஓட்டம் எண்ணங்களே (Thoughts)
கண்டதைக் காணும் ஓட்டத்தினால்
கணிப்பொறி நின்றிடும் உணருங்களேன்
(Hang)

அழகாய் அடுக்கிய எண்ணங்களால்
அழகுறும் கணிப்பொறி உணருங்களேன்
(Folders)
இடத்தை அடைத்திடும் எண்ணங்களை
உடனேக் குப்பையில் போடுங்களேன்
(Recycle bin)

வன்பொருள் சரியாய் இல்லையெனில்
மென்பொருள் சரியாய் இயங்காதே!!
இயக்கிடும் மின்கலம் இல்லையெனில்
எதுவும் இங்கே இயங்காதே!!

உடலுயிர் மனத்தை சீரமைக்க
உயர்ந்த பயிற்சிகள் தேவையன்றோ?!
மனவளக் கலையெனும் மன்றத்திலே
மூன்று பயிற்சியும் கிடைக்குதன்றோ?!

✍️செ. இராசா

குறிப்பு
*******
உடலுக்கு- எளிய முறை உடற்பயிற்சி
உயிருக்கு- காயகல்பம் எனும் பயிற்சி
மனதிற்கு- தவம் மற்றும் தற்சோதனை

*மதம் சார்ந்து அல்ல மனிதம் சார்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. பயனடையுங்கள்.

வாழ்க வளமுடன்!

No comments: