26/06/2019

#தேநீர்_கவிதை...உன்னோடு உறவாடும்



உன்னோடு உறவாடும்
ஒவ்வொரு துளிகளிலும்
மின்சாரக் கிளர்ச்சிகள்
மின்னலாய் வருகிறது!

இதழோடு விளையாடும்
எல்லாப் பொழுதிலும்
கவலைக் குப்பைகள்
காணாமல் போகிறது!

கண்ணோடு கவிபாடும்
கணங்கள் முழுவதிலும்
நிர்வாண அமைதியில்
நெஞ்சம் மகிழ்கிறது!

ஆசையில் கைப்பற்றும்
அனைத்து நொடிகளிலும்
இனிப்போடு கசப்பாகி
இன்னும் தொடர்கிறது!

#தேநீர்_கவிதை

✍️செ. இராசா

No comments: